சென்னை:
ஹிட்... ஹிட்... கொடுத்த மகிழ்ச்சியில் உள்ளார் விக்ரம் என்று கோலிவுட் கோகிலா சத்தமாக சொல்றார்...


என்ன விஷயம் என்றால் தொடர்ந்து தன் படங்கள் ஐ படம் ஹிட் என்றாலும்... விக்ரமிற்கு பெரிய ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது. இதற்கு முந்தைய படமும் ஊற்றிக் கொண்டதால் இருமுகனை வெகுவாக நம்பி இருந்தார்.


அவரது நம்பிக்கையை இருமுகன் காப்பாற்றிவிட்டது. வசூலில் செமத்தியாக கல்லாவை நிரப்பி விட்டது. சென்னையில் மட்டும் 4 நாட்களில் ரூ 2.30 கோடி வசூல் செய்துள்ளது சீயானை மீண்டும் செம பார்முக்கு கொண்டு வந்து விட்டது இந்த படம்.


விக்ரம் தான் இழந்த மார்க்கெட்டை இருமுகன் வாயிலாக  பிடித்துவிட்டார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: