மைசூர்:


அசம்பாவிதம் குறைந்து விட்டது என்று கர்நாடக அரசு கூறினாலும்... இன்னும் தமிழர்களின் மீது தாக்குதல் நடந்துதான் வருகிறது.

காவிரி பிரச்னையில் பெங்களூருவின் பெயரும், தரமும் மற்ற மாநில மக்கள் மத்தியில் சில படிகள் இறங்கியே விட்டது என்றுதான் கூறவேண்டும். அங்கு கலவரம் ஓய்ந்து விட்டது என்றாலும் அரசு தரப்பில் கூறினாலும் தினமும் அசம்பாவிதங்கள் நடந்துதான் வருகிறது.


இந்த வகையில் சில கன்னட அமைப்பினர் மைசூரில் பி. வாசுவின் சிவலிங்கா படக்குழு தங்கியுள்ள ஹோட்டல் மீது கல் வீசித் தாக்குதல் நடத்த பெரும் பரபரப்பு உருவாகிவிட்டது. இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த கல்வீச்சு தாக்குதல் சம்பவம் படக்குழு மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதாம்.



మరింత సమాచారం తెలుసుకోండి: