சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அதனை ரத்து செய்ய கோரி தனுஷ் தரப்பில் இருந்து மனு கொடுக்கப்பட்டது.வழக்கு விசாரணையில் கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் தனுஷின் பள்ளி சான்றிதழ்களை ஆதாரமாக கொடுத்தனர் அதில் உள்ள அங்க அடையாளங்கள் சரியாக உள்ளனவா இல்லையா என்பதை ஆய்வு செய்ய தனுஷை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜர் ஆக உத்தரவு பிறப்பித்தனர்.






இதனை தொடர்ந்து தனுஷ் கடந்த இரண்டாம் தேதி ஆஜர் ஆனார்.
அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது மதுரை அரசு மருத்துவமனை டீன் முன்னிலையில் 2 மருத்துவர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர்.







அந்த அறிக்கையில் தனுஷ் உடம்பில் உள்ள அங்க அடையாளங்கள் லேசர் கருவி மூலமாக அழிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த வழக்கின் விரிவான  விசாரணையை வருகிற 27 ஆம் தேதிக்கு உயர் நீதிமன்ற கிளை ஒத்தி வைத்து இருக்கிறது.



మరింత సమాచారం తెలుసుకోండి: