விஜய், அட்லீயின் படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்தடுத்தக் கட்ட பட வேலைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் ஒரு பேட்டியில் விஜய்யை பற்றி மனம் திறந்து பேசும்போது, பிரியமுடன் பட ரிலீஸ் ஆகி 2 நாள் கழித்து விஜய் என்னை அழைத்து பேசினார். அப்போது அவரிடம் நான் நீங்கள் வில்லன் வேடத்தில் நடிக்காதீர்கள் என்று கூறினேன்.

மக்கள் உங்களை எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் வைத்து பார்க்கிறார்கள் என்று கூறினேன். நான் சொன்னதை மதித்த விஜய் நீண்ட வருடங்களுக்கு பிறகு அழகிய தமிழ்மகன் படத்தில் வில்லன் வேடம் நடித்தார், ஆனால் அப்படத்தை மக்களின் மனது ஏற்கவில்லை.
விஜய் செய்தால் ஏற்காத மக்கள் அஜித் செய்தால் கொண்டாடுகிறார்கள் என்றார்.
click and follow Indiaherald WhatsApp channel