சென்னை:
அம்மா கொடுத்தாங்க... பதிவிட.... பாதுகாப்பாக வைக்க தெரியலையே... என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர். யாரை தெரியுங்களா? 


ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானைதான். தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து இன்று உலக சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு கிடுகிடுவென்று வளர்ந்து நிற்கிறார். ஆனாலும் என்றும் அவரிடம் பந்தா என்பதே இல்லை. இவரையே நெட்டிசன்கள் வறுத்தெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. என்ன விஷயம்ன்னா...


தன் அம்மா தனக்கு ஆரம்ப காலத்தில் பரிசாகக் கொடுத்த காரை படமெடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றினார் ஏ.ஆர்.ரஹ்மான். இங்குதான் அவர் செய்த ஒரு செயல் பெரும் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது. 


1986ம் ஆண்டு போர்டு கீ ப்ளேயராக இருந்த போது என் அம்மா வாங்கி தந்த அம்பாஸிடர் கார் என்று ஒரு கார் படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றினார் இவர். அந்த காரின் நிலையே... அந்தோ பரிதாபமாக இருக்கிறது. ஒரு மரத்தடியில் தூசி படிந்து காயலான் கடையில் கூட வாங்குவார்களா என்று தெரியாத நிலையில் அந்த கார் உள்ளது. 


இந்தப் படத்தைப் பார்த்த பலரும், உங்களது அம்மா கொடுத்த பரிசை இப்படியா வைத்துக் கொள்வது? நன்றாகப் பராமரித்து வைத்துக் கொள்ளுங்கள்," என்ற ரீதியில் கமெண்ட்டுகள் போட்டு அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். இனியாவது அந்த காருக்கு விமோசனம் பிறக்குமா?


మరింత సమాచారం తెలుసుకోండి: