சூப்பர் ஸ்டார் ரஜினியும் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலியும் இணையலாம் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன. இரண்டு பிரம்மாண்டங்கள் இணைவதால் இந்த காம்பினேஷனுக்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிட்டது.

இன்னும் ரஜினியும் பிரமாண்ட இயக்குனரும் உறுதி செய்யாத நிலையில் அந்த படத்தை தயாரிக்க வரிசைகட்டி நிற்கின்றன பெரிய தயாரிப்பு நிறுவனங்கள். இத்தனை பெரிய படத்தை ஏன் இன்னொருவர் பண்ணவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டும்? நாமே பண்ணலாமே... என்ற பெரிய முடிவுக்கு வந்துவிட்டாராம் தனுஷ்.
தனுஷ் தயாரிப்பில் தொடங்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு பாதி முடியும் தருவாயில் மாமனார் ரஜினியிடம் இதுபற்றி பேசவிருக்கிறாராம். அதற்கு முன்னதாக ராஜமௌலியிடம் பேசி உறுதி செய்துகொள்ளவும் திட்டமிட்டிருக்கிறார்.பார்ப்போமே ரஜினியும் கமல் ஸ்டைலில் சொந்தமாக தயரிக்கிறாரா என்று??
click and follow Indiaherald WhatsApp channel