சென்னை:
என்னால்தானா? என்னால்தானா? நிர்வாகிகள் மறைமுக, நேர்முக தாக்குதல்களால் மனமுடைந்து கிடந்த இவர் தீவிர அரசியலில் இருந்து ரெஸ்ட்... அட அதாங்க ஓய்வு பெற போகிறாராம்... யார் அவர்..?


தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாதான் அவர். கடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக படுபாதாளத்திற்கு செல்ல காரணமே பிரேமலதாதான் என்பது கட்சி நிர்வாகிகளின் கடும் குற்றச்சாட்டு. நேரடியாகவும், மறைமுகமாகவும் கொதித்து போய் பேசுகின்றனர் கட்சி நிர்வாகிகள். 


கட்சியைக் காப்பாற்றவும், தன்னால் கட்சி அழிந்தது என்ற நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும் போடுகிறார் தீவிர அரசியலுக்கு பிரேமலதா முழுக்கு என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் இவர் விலகினால் கட்சி உருப்படும் என்று முணுமுணுக்கின்றனர் கட்சியினர்.


இதனால்தான் சமீபகாலமாக அவர் தேமுதிக தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லையாம்.



మరింత సమాచారం తెలుసుకోండి: