புதுடில்லி:
கேட்ட கேள்வி ஒன்று சொன்ன பதில் ஒன்றாக இருந்ததால் நிருபர்கள் தலைமுடியை பிய்த்து கொள்ளாத குறைதான். என்ன விஷயம் என்றால்..


அறை கொடுத்ததால் அரசியல் அரங்கில் லைம் லைட்டுக்கு வந்துள்ளார் சசிகலா புஷ்பா. இவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் இவரிடம் நிருபர்கள் திமுகவில் சேர்வீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நாடாளுமன்றத்தில் எனக்கு முழு ஆதரவு தெரிவித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். அரசியலுக்கு அப்பாற்பட்டே திமுகவினர் எனக்கு ஆதரவு அளித்ததாக தெரிவித்தார்.


அதெல்லாம் சரிங்க... கேட்ட கேள்வி ஒன்று பதில் வேறொன்னாக இருந்தால் என்ன செய்வது. என்னவோ போங்க என்று நொந்துக்கொண்டனர் நிருபர்கள்.


మరింత సమాచారం తెలుసుకోండి: