தாக்கா:
உணவு விடுதியில் தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகள் இன்று சுட்டுக்கொல்லப்பட்டனர்.


தாக்காவில் உள்ள உணவு விடுதியில் கடந்த ஜீலை 1ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 29 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில் தொடர்புடைய 4 பயங்கரவாதிகளை வங்கதேச போலீசார் இன்று சுட்டுக் கொன்றனர்.


இந்த பயங்கரவாதிகள் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை குறிவைத்து இவர்கள் தாக்குதல் நடத்தி வந்ததாகவும் வங்கதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: