நடிகை த்ரிஷா சமீப காலமாக தனது கதாபாத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தேடி தேடி தேர்வு செய்து நடித்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொடி படத்தில் ருத்ரா என்ற வில்லத்தனமான பெண் அரசியல்வாதியாக நடித்தவர் சென்ற வாரம் வெளியான பேய் படமான மோகினி படத்தில் முதலாவதாக முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

Image result for trisha apherald

வைஷ்ணவி என்ற சமையல் காலை வல்லுநராகவும் அவருக்குள் புகுந்து பழி வாங்கும் மோகினி என்ற பேயாகவும் என இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்து த்ரிஷா கலக்கியுள்ளார். இருந்தாலும் படம் எதிர்பாராத அளவுக்கு விமர்சனங்களை பெறாமல் தோல்வியை தழுவியுள்ளது.

Image result for trisha apherald

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் த்ரிஷா தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தில் நடிக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா மற்றும் த்ரிஷா இருவருமே ஒரே பள்ளியில் படித்த டாப்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக த்ரிஷா நடிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் அவர் நடித்துள்ள தொண்ணூற்றி ஆறு படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: