சென்னை:
தமிழகத்தை உலுக்கிய சுவாதி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் மின் ஒயரை கடித்து தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார் சுவாதி என்ற இளம்பெண். இந்த கொலை வழக்கு தமிழகத்தை பெரும் உலுக்கு உலுக்கியது. இந்த வழக்கில் ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.


இந்நிலையில் ராம்குமார் சிறையில் மின் கம்பியை கடித்து தற்கொலைக்கு முயன்றார். உடன் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: