சென்னை:
காஞ்சனா படத்தில் ஹீரோயினாக நடித்த நித்யா மேனன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று  சினிமாத்துறைக்கு வரலையாம். சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து பெயர் வாங்குவதுதான் அவரது ஆசையாம். யாரங்கே... இனி நித்யாமேனனுக்கு சம்பளமே தராதீங்க...


இந்த அம்மணிக்கு நல்ல, நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் பெரிய ஆசையாம். பணம் முக்கியமில்லை. அதை நினைத்து நான் நடிக்க வர்ல. மற்றவர்களிடம் மரியாதை காட்டுவது மாதிரியும் அப்பாவி மாதிரியும் எனக்கு நடிக்க தெரியாது. நேருக்கு நேர் பேசிவிடுவேன். எனக்கு காதல் வந்துச்சு... ஆனா அவருடன் வாழ முடியாது என்று தோன்றியதால் விலகி விட்டேன் என்று பொட்டில் அடிப்பது போல் சொல்லி உள்ளார்.


இப்போது இவர் விக்ரம், கன்னட சுதீப் ஆகியோருடன் பெரிய பேனர் படங்களில் நடித்து வருகிறார். இவரிடம் ஒரு கேள்வி... ஏங்க அம்மணி இந்த 2 படத்துலேயும் சம்பளம் இல்லாமலா நடிக்கிறீங்க...


మరింత సమాచారం తెలుసుకోండి: