ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கும் 100-வது மெகா பட்ஜெட் திரைப்படத்தை சுந்தர் சி இயக்கப் போகிறார். இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகையை தற்போது படக்குழுவினர் பரிசீலினை செய்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. 


மேலும் சரித்திரக் கதையை கொண்டு உருவாகவுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாஹுபலி திரைப்படத்தில் பணியாற்றிய சாபு சைரில் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோரும் இந்த படத்தில் பணியாற்ற ஒப்பந்தமாகியுள்ளனர். 


இந்நிலையில் பிச்சைக்காரன் திரைப்படத்திற்கு பிறகு சசி இயக்கவுள்ள புது திரைப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கப் போவதாக முதலில் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் சித்தார்த் மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 


ஆனால் தற்போது சுந்தர் சி இயக்கவுள்ள மெகா பட்ஜெட் திரைப்படத்தை முடித்த பிறகு தான் சசி இயக்கவுள்ள  புது படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்குமாம். அதுவரை சித்தார்த், ஜிவி பிரகாஷ் காத்திருக்க வேண்டும் என்று கூறிவிட்டதாக கூறப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: