சென்னை:
கோலிவுட்டை கலங்கடித்த மிகப்பெரிய வதந்தி என்று நினைத்த ஒரு செய்தி உண்மை என்று தெரிய வந்துள்ளதால் ரசிகர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். நட்சத்திர தம்பதிகளின வாழ்வு என்பது விட்டில் பூச்சி வாழ்வுதானா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது. அது என்ன? இதன் பின்னணி என்ன என்று பார்ப்போமா?


கடந்த சில நாட்களாக நட்சத்திர தம்பதிகளான இயக்குனர் விஜய்-அமலாபால் ஆகியோர் மணவாழ்க்கை முறிவு ஏற்பட்டது என்று தகவல் பரபரவென்று உலா வந்தது. இது பொய்யாகி விடவேண்டும் என்று ரசிகர்கள் வேண்டிக் கொள்ள... நெருப்பில்லாமல் புகையாது என்று அந்த செய்தி உண்மையாகி விட்டது. 


ஆம்... உண்மைதான் விஜய்-அமலாபால் தம்பதிகள் தங்கள் "மனம்" போல் ஏற்படுத்திய "மண" வாழ்க்கையை "மனமொத்து (?)" முறித்துக்கொள்ள உள்ளனராம. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் இவர்களின் திருமணம் கிராண்டாக நடந்தது. கேரளத்தில் அமலாபால் மதத்தின் வழக்கப்படி நிச்சயதார்த்தமும், சென்னையில் இயக்குனர் விஜய் மதத்தின் வழக்கப்படி திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் இனிமையாகவே சென்ற இவர்களின் வாழ்க்கை அனைவராலும் பாராட்டப்பட்ட ஒன்று. இங்குதான் விதிவலியது என்று நிரூபித்தது. 


இயக்குனர் விஜய் கிராப் திருமணத்திற்கு பிறகு சற்றே தேக்கமடைய... அமலாபாலின் கிராப்போ... கிடுகிடுவென உயர ஆரம்பித்தது. வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட அம்மா கணக்கு தப்பாமல் ஜெயிக்க... தமிழ், மலையாளம், தெலுங்கு என்று வெரைட்டியாக இவர் நடிக்க படங்கள் புக் ஆனது. இதற்கிடையில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்து விஜய் தன் காதல் மனைவிக்காக பெற்றோர், அண்ணன், அண்ணியை பிரிந்து போர்ட் கிளப்பில் பெரிய வீட்டுக்கு தனியாக மனைவியுடன் குடிவந்தார். 


ஏற்கனவே பார்ட்டி பறவையாக இருந்த அமலாபால் இதற்கு பிறகு மேலும் சுதந்திரம் அடைந்தது போல் தொடர்ந்து பார்ட்டிக்கு செல்ல ஆரம்பிக்க... முதலில் இதை சகஜமாக எடுத்துக்கொண்டாராம் விஜய். ஆனால் இவரது குடும்பத்தினர் இதை கண்டிக்க மனைவியிடன் மெதுவாக இதை கூறியுள்ளார். இதைவிட கொடுமை என்னத்தான் நடிகையின் கணவராக இருந்தாலும் தன் மனைவியின் அரைகுறை ஆடைகளும், சிறிய குட்டை உடைகளும் இயக்குனர் விஜய் மனதை ரம்பம் வைத்து அறுக்காத குறைதான். அப்போதே பிரச்னை ஆரம்பித்துள்ளது.


இதுதான் தற்போது விவாகரத்து வரை வந்து சேர்ந்துள்ளது. திருமணம் முடிந்த பிறகு நம் கலாச்சாரத்திற்கு ஏற்ப ஆடைகள் அணிய வேண்டாமா? இந்த விஷயம் கடந்த ஓராண்டுக்கு முன்பே இயக்குனர் விஜய்க்கு சகோதரி முறை உறவான பிரபல குணச்சித்திர நடிகை சரண்யா பொண்வண்ணன் கூறிய கருத்தும் தற்போது அனைவரின் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு பேட்டியில் அவரிடம் அமலாபாலுக்கு நீங்கள் கொடுக்கும் அட்வைஸ் என்ன என்று கேட்டபோது, அமலாபால் என் தம்பி விரும்பும்படியான உடையை அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுதான் இவர்களின் பிரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 


படங்களில் நடிப்பதை கூட ஏற்றுக்கொண்ட இயக்குனர் விஜய்க்கு தன்மனைவி பார்ட்டிகளில் பங்கேற்பதும், அரைகுறை ஆடைகளில் உலா வருவதும் சுத்தமாக பிடிக்காமல் போனது. இதற்கிடையில் படங்கள் அதிகளவில் புக் ஆக... இயக்குனர் விஜய்யும் பிரபுதேவா நடிக்கும மும்மொழி படத்தை இயக்க ஆரம்பித்தார். ஒருபுறம் கேரளாவில் தங்கி தன் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அமலாபால். அவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருந்ததால் மனம் வெறுத்த விஜய் அந்த வீட்டை காலி செய்து விட்டு தன் பெற்றோரிடம் வந்து சேர்ந்துவிட்டார்.


இதனால் இவர்கள் இருவரும் தற்போது மனம் ஒத்து போய் விவாகரத்து செய்வதாக முடிவு செய்துள்ளனர். இதை விஜய்யின் தந்தையே அறிவித்து விட்டார். 


அழகும், திறமையும் கொண்டவர்கள் மலையாள நடிகைகளின் வாழ்க்கை என்பது வெறும் விட்டில் பூச்சி வாழ்க்கைதான் என்பதை தற்போது அமலாபாலின் வாழ்க்கையும் நிரூபித்துள்ளது. இதேபோல் மணமுறிவு செய்த மலையாள நடிகைகள் யார்? யார் என்று பார்ப்போமா?


காவ்யா மாதவன் தமிழில் சில படங்கள் நடித்தாலும் சிறந்த நடிகை... இவர் 2009ல் நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்தார். ஆனால் கணவர் செய்த சித்ரவதையால் 2011ல் விவாகரத்து செய்தார். 


மஞ்சு வாரியர். அழகும் திறமையும் நிறைந்த நடிகை... இவர் 1998ல் நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு 2015ல் மணவாழ்க்கையை முறித்தது.


மம்தா மோகன்தாஸ்... நல்ல திறமையான நடிகை... இவர் 2011ல் தொழில் அதிபர் பிரஜித் என்பவரை மணந்த இவர் கருத்து வேறுபாட்டால் ஒரே வருடத்திலேயே பிரிந்தார்.


நடிகை லிசி.. இயக்குனர் பிரியதர்ஷனை 1990ல் காதல் திருமணம் செய்துகொண்டார். மனமொத்த தம்பதிகளாக 13 ஆண்டுகள் வாழ்ந்த இவர்கள் பின்னர் ஏற்பட்ட பிரச்னையால் விவாகரத்து பெற்றனர்.


ஊர்வசி... தமிழில் இன்றும் இவருக்கென்று தனியிடம் உண்டு... 2000ம் ஆண்டு மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை திருமணம் செய்துகொண்டார். 8 ஆண்டுகள் வாழ்ந்தது போதும் என்று 2008ல் விவாகரத்து பெற்றார். 


ஜோதிர்மயி... 2004ல் நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் 8 வருட வாழ்க்கைக்கு பிறகு 2011ல் விவாகரத்து செய்தார். இந்த லிஸ்டில் நடிகைகள் கலாரஞ்சனி, லெனா ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். தற்போது நடிகை அமலாபால் வாழ்க்கையும் இப்படி விட்டில் பூச்சியாக மாறும் என்று யாரும் எப்போதும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.


మరింత సమాచారం తెలుసుకోండి: