சென்னை:
எப்போ... எப்போ என்று ஏங்கி கொண்டிருந்த ரசிகர்கள் இந்த செய்தியால் உற்சாகம் அடைந்துள்ளனர்.


யாரோட ரசிகர்கள் தெரியுங்களா? உலக நாயகன் கமல் ரசிகர்கள்தான். காரணம் இதுதான்? எடுத்து முடிச்சும் வெளிவராம இருக்கும் விஸ்வரூபம்-2 வை நினைத்து கவலைப்பட்டுக்கிட்டு இருந்தாங்க ரசிகர்கள். இப்போ இந்த படம் லைக்கா நிறுவனம் அண்டர்டேக் செய்து விட்டதாக உறுதியா சொல்றாங்க.


இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனால் படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது. பொறுத்து பொறுத்து பார்த்த கமல் தானே இந்த படத்தை வாங்கி வெளியிடும் மனநிலைக்கு வந்தார். தற்போது லைக்கா நிறுவனம், ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் இருந்து இந்த படத்தின் உரிமையை பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 


எப்படியும் இந்த படம் கைமாறிவிடும் என்று பாசிட்டிவ் தகவல்கள் வெளிவந்துள்ளது. 


இதுமட்டுமா? கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' படத்தையும் லைக்கா நிறுவனம் கமல் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது தெரிந்து செய்தி... கமல்ஹாசனின் கனவுப்படமான 'மருதநாயகன்' படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டு இருக்காங்களாம்... இது எப்படி இருக்கு! 


మరింత సమాచారం తెలుసుకోండి: