சென்னை:
மகனின் படத்திற்கு அப்பாவே தடையா... கோலிவுட் ரசிகர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.


விஷயத்திற்கு வருவோம். அச்சம் என்பது மடமையடா படத்தில் கவுதம்மேனன்- சிம்பு மோதிக்கொண்டது அனைவரும் அறிந்த ஒன்று. இதில் தனக்கு சம்பள பாக்கி இருக்கிறது என்று ஒரு பாடலில் நடிக்க மறுத்து சிம்பு அடம் பிடிக்க... கவுதம் மேனன் பாட்டே இல்லாட்டி பரவாயில்லை படத்தை வெளியிடுவேன் என்று எதிர்த்து நிற்க... இடையில் என்ன நடந்ததோ... இருவரும் சமாதானம் ஆகிவிட்டதாக தகவல்.


இதையடுத்து படம் வரும் செப்.9-ம் தேதி வெளியாக இருப்பதாக கவுதம்மேனன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடரப் போகிறாராம் டி.ராஜேந்தர். 


சிம்புவுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் முழுவதையும் கொடுத்தால் தான் படத்தை ரிலீஸ் செய்ய விடுவேன் என்கிறாராம் டி.ஆர். மகனின் படத்திற்கு அப்பாவே தடையா?


మరింత సమాచారం తెలుసుకోండి: