இயக்குனர் ஷங்கர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் '2.0' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. 


இதையடுத்து அவரது அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அடுத்து ஒரு படத்தை தயாரிக்க போகிறார். அந்த படத்தில் யார் நடிக்க போகிறார் தெரியுமா.... 


வேறு யாருமில்லை... நமது வைகை புயல் வடிவேலு தான்.... சிம்பு தேவன் இயக்கத்தில் கடந்த 2006-ம் ஆண்டு, வடிவேலு நடித்த 'இம்சை அரசன்  23ஆம் புலிகேசி' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான் உருவாக உள்ளதாம்.

இம்சை அரசன்  23ஆம் புலிகேசி

இம்சை அரசன் புலிகேசி க்கான பட முடிவு


இந்த படத்தை சிம்பு தேவன் இயக்க உள்ளதாகவும், ஷங்கர் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. மேலும் முந்தய பாகத்தை போல இதில் வடிவேலு முக்கிய ரோலில் நடிக்க உள்ளார் என்றும் இதன் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்குவதாக தகவல்கள் வந்துள்ளன.


மேலும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: