சென்னை:
பிடிக்காதா... மருமகனின் இசையை இசைப்புயலுக்கு பிடிக்காதா? இப்போது இந்த விவாதம்தான் கோலிவுட்டை கலங்கடித்து வருகிறது.


என்ன விஷயம் தெரியுங்களா? இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அங்குதான் ஆரம்பித்தது வினை. கேள்வி கேட்டுக் கொண்டிருந்த நிருபர் வைச்சார் ஒரு பாருங்க ஒரு கேள்வியை... ஆனால் அசரவே இல்லீயே... இசைப்புயல்...


அவரிடம் என்ன கேள்வி கேட்டார் தெரியுங்களா? இப்ப வர்ற இளம் இசையமைப்பாளர்களில் உங்களை கவர்ந்தவர் யார்? என்பதுதான் அந்த கேள்வி.


அசராமல் அடித்தார் பாருங்க இசைப்புயல் பதிலை... சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், அனிருத் என்று. இவர்கள் மூவரும்தான் இவருக்கு பிடித்த இசையமைப்பாளர்கள் என்று வந்து விழுந்தது உண்மை. இருந்தாலும் நிருபர் சற்று காத்திருந்தார். அடுத்ததாக யாரையாவது சொல்வாரா என்று ஆனால் அடுத்த கேள்விக்கு தயாராகிவிட்டார் இசைப்புயல்...



మరింత సమాచారం తెలుసుకోండి: