சென்னை:
அவரால்தான் படத்தின் ரிலீஸ் தள்ளி போய் உள்ளது என்று கோலிவுட் உளவாளிகள்டி சொல்றாங்க... யார் படம் யாரால் தள்ளி போய் இருக்கு தெரியுங்களா?


இதே உங்களுக்காக அந்த விஷயம். விக்ரம் நடித்துள்ள இருமுகன் படத்தின் நிலைதான் இது. செப்.2ம் தேதி வெளியாகிறது என்று கூறப்பட்ட இந்த படம் ஒரு வாரம் தள்ளி போய் உள்ளது. 


இதற்கு காரணம் தயாரிப்பாளர்தான் என்கின்றனர். இந்த படத்தை மலையாள தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார். இவர் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா என பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு செம எகிறு எகிறியுள்ளது.


ஆனால் மோகன்லால், ஜீனியர் என்டிஆர், சமந்தா நடித்த படம் வரும் செப்.2ம் தேதி வெளியாகிறது. அதே தேதியில் இருமுகன் படமும் வெளியானால் பாக்ஸ் ஆபீஸ் பாதிக்கும் என்பதால் ஷிபு தமீன்ஸ் படத்தின் ரிலீசை தள்ளி வைத்துள்ளாராம். இதனால் விக்ரம் சற்றே அப்செட்டாகி உள்ளார் என்று தகவல்கள் பரபரக்கின்றன.



మరింత సమాచారం తెలుసుకోండి: