'பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிப்பேன், முன்னணி ஹீரோக்கள் இருந்தால் தான் ஜோடியாக நடிப்பேன்' என்பது போன்ற எந்த தடைகளும் நிபந்தனையையும் விதிப்பது இல்லை, நிக்கி கல்ராணி. காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் மட்டுமே அம்மணி குறியாக இருக்கிறார்.
யார் ஹீரோ, பெரிய பட்ஜெட்டா, படத்தில் தனக்கு கதையில் முக்கியத்துவம் இருக்கிறதா என்பது பற்றி எல்லாம் சற்றும் கவலைப்படாமல், வரும் வாய்ப்புகளை எல்லாம் ரவுண்டு கட்டி வளைத்து போடுவதால், இப்போது, அவர் கைவசம் அதிக படங்கள் உள்ளன. மரகத நாணயம், டீம் 5 என, அடுத்ததுத்து படங்கள் ரிலீசாவதும், அவரை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

முன்பெல்லாம், சென்னை வந்தால், ஓட்டலில் தான் தங்குவார் நிக்கி. இப்போது, எழும்பூரில் உள்ள ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில், வாடகைக்கு வீடுடே எடுத்து விட்டார். இதே அடுக்கு மாடி குடியிருப்பில் தான், நயன்தாராவும் தற்போது தங்கியுள்ளாராம்.
click and follow Indiaherald WhatsApp channel