கொச்சினில் ஒரு செல்போன் கடையைத் திறக்க வந்த சன்னி லியோனைப் பார்க்க பல ஆயிரம் மக்கள் திரண்டதால் கொச்சி நகரமே  சில நிமிடங்கள் திக்குமுக்காடியது. முன்னர் ஆபாச நடிகையாக இருந்து, இப்போது கவர்ச்சி கன்னியாக மாறியிருப்பவர் சன்னி லியோன். இந்தியாவுக்கு வந்த பிறகு அவரே எதிர்ப்பார்க்காத அளவுக்கு ரசிகர்கள் அவருக்கு ஆதரவு பெருகிவிட்டது. பாலிவுட்டில் முழுநேர கவர்ச்சி நடிகையாக மாறிவிட்ட அவர், இப்போது ரொம்ப கோடிகளில் புரளும் நடிகையும் கூட. கோடிகளில் சம்பளம் வாங்குகிறார் படங்களில் நடிக்க மட்டுமே.

Kochi people surprise Sunny Leone

கடைத் திறப்பு விழாக்களுக்கோ அதை விட சில கோடிகள் அதிகமாக சார்ஜ் பண்ணுகிறார். அந்த வகையில் கொச்சினில் ஒரு பிரபல செல்போன் கடைத் திறப்புக்கு வந்துள்ளார் சன்னி லியோன்.


அந்த சாலை முழுவதும் எங்கு பார்த்தாலும் ரசிகர் மக்கள் தலைகளே. கொச்சி நகரமே சில மணி நேரம் திக்கு முக்காடியது என்றால் மிகையல்ல. இதுகுறித்து கருத்து  சொன்ன  சன்னி லியோன், "கொச்சி நகர மக்களுக்கு தனது நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அவர்களின் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் நெகிழ வைத்துள்ளது. கடவுளின் தேசத்தை வாழ்க்கையில் மறக்க முடியாது!" என்று கூறியுள்ளார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: