ராமநாதபுரம்:
ஒருபுறம் மீனவர்களுக்கு உதவ அடையாள அட்டை வழங்க போகிறோம் என்று சொல்லிவிட்டு மறுபக்கம் மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறித்து செல்வதும் என்று இலங்கை இரட்டை வேடம் போட்டு வருகிறது.


எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை ராணுவம் மீண்டும் சிறை பிடித்து அத்து மீறியுள்ள செயல் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


3 படகுகளில் மீன் பிடிக்க சென்ற ராமநாதபுரம் மீனவர்கள் 16 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வழக்கம் போல் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரணம் கூறி உள்னர். 


சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின், 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு மீனவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மீனவர்களை கைது செய்வதும் பின்னர் அவர்களை விடுவிப்பதும் என்று இலங்கை இரட்டை வேடம் போட்டு வருகிறது. ஆனால் மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் படகுகள் மட்டும் மீண்டும் திருப்பி தரப்படுவதே இல்லை.


இலங்கையின் இந்த அட்டூழியச் செயல்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்து வருவதால் இதுகுறித்து இனியும் காலதாமதம் செய்யாமல் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


మరింత సమాచారం తెలుసుకోండి: