சென்னை:
தேமுதிக போல் இந்த கட்சியின் கூடாரமும் காலியாகிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். எந்த கட்சி தெரியுங்களா?


சட்டசபை தேர்தல் தோல்வி தேமுதிக, தமாகவிற்கு மிகப்பெரிய அடியை கொடுத்துள்ளது. தேமுதிக நிர்வாகிகள் பலர் அதிமுகவிற்கும், திமுகவிற்கு படை எடுத்து அங்கு ஐக்கியமாகின்றனர். இதனால் தேமுதிக கலகலத்து போய் உள்ளது. இந்நிலையில் தற்போது தமாகாவிற்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.


தமாகாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அதிமுகவில் ஐக்கியமாகினார். இப்போ எம்.பி.யும் ஆகி விட்டார். இவரையடுத்து ஞானசேகரனும் அதிமுகவில் சங்கமித்தார். இப்படி கூடாரம் காலியாகும் நிலையில் தற்போது பெரிய இடியை தமாகா சந்திக்க உள்ளதாம். எப்படி தெரியுங்களா?

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்


தமாகாவின் முக்கிய நிர்வாகியும், காங்கிரஸ் முன்னாள் தமிழக தலைவருமான ஞானதேசிகனும் அதிமுகவில் சேர இருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன. இன்னும் சில ஓரிரு நாட்களில் இது உண்மையா என்று தெரிந்து விடும். 



మరింత సమాచారం తెలుసుకోండి: