சென்னை:
வரும் 17ம் தேதி ஆஜர்படுத்துங்க என்று போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. யாரை தெரியுங்களா?


சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கும் ராம்குமாரை வரும் 17ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சுவாதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு ராம்குமார் போலீசாரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார். இதையடுத்து அவரை  நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்திற்கு அழைத்த சென்ற போலீசார் அவர் எப்படி அந்த கொலையை செய்தார் என்று நடித்து காட்டச் சொல்லி வீடியோவாக எடுத்துள்ளனர்.


 மேலும் சுவாதி நண்பர் பிலால் மாலிக் மற்றும் தோழிகள் 5 பேரிடம் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளதாம். இந்நிலையில் ராம்குமாரின் கையெழுத்தை ஒப்பிட்டு பார்க்க அனுமதி கேட்டு போலீசார் எழும்பூர் நிதிமன்றத்தில் மனு அளித்தனர். 
இதை விசாரித்த நீதிபதி வரும் 17ம் தேதி ராம்குமாரை ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார். அங்கு நீதிபதி முன்னிலையில் அவர் கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிலால் மாலிக்



మరింత సమాచారం తెలుసుకోండి: