சென்னை:
என்ன இது... இப்படியும் நடக்குமா? நடக்கலாமா என்று அரசியல் அரங்கில் பதற்றம் உருவாகி உள்ளது. இன்று இறந்தவருக்கு நேற்றே இரங்கல் தெரிவிப்பதா?


குழப்பமபாக இருக்கிறதா? இதே விஷயத்திற்கு வந்து விட்டோம். திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் இன்று (13ம் தேதி) அதிகாலை உடல்நலக் குறைவால் காலமானார்.


இதையடுத்து திமுக இரங்கல் தெரிவித்து கட்சி தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பி உள்ளது. இங்குதான் வினை ஆரம்பித்துள்ளது. அந்த கடிதத்தில் 13.08.2016 ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு சற்குண பாண்டியன் மறைந்தார். அதனால் இன்று முதல் 3 நாட்களுக்கு கட்சி கொடிகளை அரை கம்பத்தில் பறக்க விட வேண்டும். அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 


இதில் என்ன என்று கேட்கிறீர்களா... இருக்குங்க... இந்த கடிதம் 12.08.2016 தேதியிட்டு வெளியிட்டுள்ளது. அதாவது சற்குண பாண்டியன் மறைவதற்கு முன்பே இந்த கடிதம் வெளியிட்டது போல் வந்துள்ளது. இதான் தற்போது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Displaying 18.jpg

మరింత సమాచారం తెలుసుకోండి: