புதுடில்லி:
விமான பயணத்தின் போது பைலட் உட்பட விமான பணியாளர்கள், பயணிகள் செல்பி எடுக்க தடை விதிக்க போறாங்க...


ஆமாங்க... இந்த செல்பி போதை இருக்கு பாருங்க... அப்பப்பா... தாங்க முடியலைங்க சாமி... கட்டிடத்தின் உச்சி மீது நின்று எடுப்பது... ஓடும் பஸ்சில் வெளியில் தலையை நீட்டி எடுப்பது, ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து எடுப்பது என்று இவர்கள் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லாமல் போயிடுச்சு...


இப்படிதான் கடந்த வாரம் விமானிகள் சிலர், விமானம் தரையிறங்குவதற்கு முன் செல்பி எடுத்துக் கொண்ட விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. நல்லவேளை இவர்கள் தலையை வெளியில் நீட்டி செல்பி எடுக்கலை... அப்புறம் என்ன வழக்கம் போல் நெட்டிசன்கள் வறுத்தெடுக்க... பிரச்னை பெரிதானது. 


இதையடுத்து விமான பயணத்தின் போது விமான பணியாளர்கள் மற்றும் பயணிகள் செல்பி எடுப்பதற்கு தடை விதிக்க மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. விமான நிறுவனங்களும் தங்களின் பணியாளர்களை, விமானம் பறந்து கொண்டிருக்கும் போது செல்பி எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளன. 



మరింత సమాచారం తెలుసుకోండి: