சென்னை:
வாங்க... வாங்க... என்று தமிழகம் புதிய கவர்னரை வரவேற்க காத்திருக்கிறது.


மகாராஷ்டிரா கவர்னராக பதவி வகித்து வரும் வித்யாசாகர் ராவ் இன்று மாலை 4.30 மணியளவில் தமிழக கவர்னராக பதவியேற்க உள்ளார். இதற்கான விழா கவர்னர் மாளிகையில் நடக்க உள்ளது.


இங்கு கவர்னராக இருந்த ரோசைய்யாவின் பதவி காலம் முடிவடைந்தது. இதையடுத்து மகாராஷ்டிரா மாநில கவர்னராக உள்ள வித்யாசாகர் ராவ், கூடுதல் பொறுப்பாக தமிழக கவர்னர் பதவியை வகிப்பார் என்று ஜனாதிபதி மாளிகை அறிவித்தது.


தொடர்ந்து வித்யாசாகர் ராவ் இன்று மாலை பதவியேற்கிறார். மாலை 4.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடக்கும் பதவியேற்பு விழாவில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், கவர்னர் வித்யாசாகர் ராவிற்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். விரைவில் புதிய கவர்னர் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: