ஆக்ரா:
மதம் பிடித்து அலையும் மனிதர்களே... சற்று நின்று இந்த செய்தியை பாருங்க... இதுதான் உண்மையிலேயே மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு.


உ.பி.,யில் மேற்கு பகுதியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி 35 முஸ்லிம் குழந்தைகளுக்கு குரான் குறித்து பாடம் கற்பித்து வருகிறார். அதுவும் இலவசமாக... இதுதாங்க உண்மையான மத ஒற்றுமை... சபாஷ் போடுவோம்...


உ.பி.,யின் ஆக்ரா சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த மாணவி பூஜா குஷ்வாகா. இவர் கோவில் வளாகத்தில் முஸ்லிம் குழந்தைகளுக்கு இலவசமாக குரான் குறித்து பாடம் கற்பித்து வருகிறார். அதுவும் ஒன்றல்ல... இரண்டல்ல... 35 குழந்தைகளுக்கு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...


இது தொடர்பாக பூஜாவிடம் குரான் படிக்கும் சிறுமியின் தாயார் ஒருவர் கூறுகையில், பூஜாவின் திறமையை ஆச்சரியப்படுத்துகிறது. எனது குழந்தைக்கு இந்த மாணவி ஆசிரியையாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. அந்த சிறுமியின் மதம் குறித்த எண்ணம் எனக்கோ மற்ற சிறுமிகளின் பெற்றோர்களுக்கோ வரவில்லை" என்றாரே பாருங்க... மதம் என்பது மதம் பிடித்த மனிதர்களிடம் இருந்து விலகி போக செய்ய வேண்டும் இந்த செயல்...



మరింత సమాచారం తెలుసుకోండి: