இஸ்லாமாபாத்:
இந்தியாவிற்கு எதிராக அணுஆயுதத்தை பயன்படுத்துவோம். இந்தியா அழித்துவிடுவோம் என்று பூச்சாண்டி காட்டியுள்ளார் பாக்., பாதுகாப்புத்துறை அமைச்சர். இவரது திமிர் பேச்சுக்கு இப்போது செம கண்டன அலைகள் எழுந்துள்ளன. 


காஷ்மீரின் யூரி தாக்குதலில் பாக்.,க்கு தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்களை அந்நாட்டின் தூதரக அதிகாரி அப்துல் பசித்திடம் இந்தியா ஒப்படைத்துள்ளது. 


இந்நிலையில் யூரி தாக்குதல் குறித்து பேசிய பாக்., பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா அஷிப், இந்தியாவை அழித்து விடுவோம் என்று பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். தற்போது இவரது பேச்சு கடும் கண்டத்திற்கு உள்ளாகி வருகிறது.


அவர் என்ன சொல்லியிருக்கார் என்றால்... யூரி தாக்குதல் இந்தியா போட்ட திட்டமாம். இந்தியர்களை இந்தியாதான் திட்டம் போட்டு கொலை செய்துள்ளது.


காஷ்மீர் விவகாரத்தில் உலகின் பார்வையை திசை இந்த திருப்புவதற்காகவே யூரி தாக்குதலை இந்தியா அரங்கேற்றி உள்ளது. 
இதற்கு பழிக்கு பழி வாங்க பாக்.,மீது போர் தொடுக்க இந்தியா முயன்றால் இந்தியாவை அழித்து விடுவோம்.


வெறும் காட்சிக்கு வைப்பதற்கு நாங்கள் அணுஆயுதத்தை தயாரிக்கவில்லை. இந்தியாவிற்கு எதிராக அணுஆயுதத்தை பயன்படுத்துவோம். குண்டுகளை வீசி இந்தியாவை இல்லாமல் செய்து விடுவோம் என்று பய பூச்சாண்டி காட்டியுள்ளார். இவரது இந்த பேச்சுக்கு தற்போது கடும் கண்டன அலைகள் எழுந்துள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: