இத்தலத்தில் அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு விநாயகர், முருகன், சிவன், நாகர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், அஷ்டலட்சுமிகள், நவகிரகம் ஆகியவற்றை ஒரே தலத்தில் தரிசனம் செய்யலாம்.


மேலும் இத்தலத்தில் வெள்ளி கிழமை தோறும் ராகு கால பூஜையும், செவ்வாய் கிழமைகளில் முருகனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகமும்,வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடுகளும், நடத்தப்படுகின்றன.


மேலும் ஒவ்வொரு வார செவ்வாய் கிழமையும், இங்கு முருகனுக்கு மாங்கல்ய பரிகார தோஷம் செய்யபப்டுகின்றன. இதில் திருமணம் தடை இருப்பவர்கள் கலந்து கொண்டால், நல்ல பலன் கிடைக்கும். 


மேலும் பெண்கள் மனம் கஷ்டத்தை, இந்த அம்மன் உடனே தீர்த்து வைப்பதால், இங்கு பக்தர்கள் குவிந்து காணப்படுகின்றனர்.


இத்தலம் காலை 5 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 


మరింత సమాచారం తెలుసుకోండి: