சென்னை:
அட போங்கய்யா... என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. இத்தனை நாளுக்கு பிறகு ஆலமரத்துக்கு கீழே ஜமுக்காளம் விரித்து பஞ்சாயத்தை ஆரம்பிச்சா... அப்புறம் எப்படி இருக்கும்.


சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த கபாலி பெற்ற பிரமாண்ட வெற்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சூப்பர் டூப்பர் ஹிட் என்றும் சொல்ல முடியாது. உலகமே கோலிவுட்டை உற்று பார்க்க வைத்த கலெக்சன் இந்த படத்திற்கு.


இப்படத்திற்கு சென்ஸார் போர்ட் யு சான்றிதழ் வழங்கி இருந்தது. படம் வெளிவந்து 70 நாட்களுக்கு பிறகு ஒருவர் இந்த படத்திற்கு எப்படி யு சான்றிதழ் கொடுக்கலாம் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். இவரை என்னவென்று சொல்வது...?


படத்தில் பல இடங்களில் வன்முறை காட்சிகள் உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ரூ.70 கோடி முதல் ரூ.100 கோடி வரை லாபம் சம்பாதித்துவிட்டார். கண்டிப்பாக வரிவிலக்கை ரத்து செய்யவேண்டும் என வழக்கு தொடுத்துள்ளார். ஜமுக்காளம், சொம்பு ரெடி நாட்டாமை...!


మరింత సమాచారం తెలుసుకోండి: