சென்னை:
அவரா... இவரா... என்ற குழப்பத்திற்கு இப்படி பதில் சொல்லியிருக்கார்...அட அவரும்தான்... இவரும்... கிளைமேக்சில்தான் தெரியும் போங்க என்று இவர் சொல்ல... ஏகப்பட்ட குழப்பம்.


யார்... யாரை பற்றி சொல்லியிருக்காங்க... பார்ப்போமா? கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதியா? டி.ராஜேந்தரா? வில்லன் என்பதுதான் இப்போது வரை ரசிகர்களின் குழப்பம். இதற்கு பதில் சொல்ல வேண்டியது யாரு? இயக்குனர்தானே? அவரும் சொல்லியிருக்கார். எப்படி தெரியுங்களா? 


விஜய் சேதுபதி, டி.ஆர். இருவருக்குமே வில்லத்தனம், ஹீரோயிசம் என்பது கலந்து இருக்கும். கிளைமாக்சில்தான் யார் வில்லன்? என்பது தெரியவரும் என்று அவர் பாணிக்கு ஒரு குழப்பு குழப்பி இருக்கிறார். 


இப்படத்தின் கதாநாயகியாக மடோனா செபஸ்டியான் நடிக்கிறார். 


படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாம். விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தென்அமெரிக்காவில் படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.



మరింత సమాచారం తెలుసుకోండి: