விஷாலை ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்திய படம் 'சண்டக்கோழி'. இதில் அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். ராஜ்கிரண் முக்கிய கேரக்டரில் நடித்தார். 2005ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை லிங்குசாமி இயக்கி இருந்தார். இப்போது 11 வருடங்களுக்கு பிறகு 'சண்டக்கோழி பார்ட் 2' தயாராக இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பே 'பார்ட் 2' வந்திருக்க வேண்டும்.

லிங்குசாமிக்கு ஏற்பட்ட சில பொருளாதார பிரச்சனைகள், லிங்குசாமி, விஷால் இடையே இருந்த சில கருத்து வேறுபாடுகள் காரணமாக தள்ளிப்போனது. இப்போது அனைத்தும் சரி செய்யப்பட்டு 'சண்டக்கோழி பார்ட் 2' தயாராகப்போகிறது.தற்போது தெலுங்கு படத்தை இயக்கி வரும் லிங்குசாமி அதை முடித்த பிறகு, 'துப்பறிவாளன்', 'கத்தி சண்டை' படங்களில் நடித்து வரும் விஷால் அதை முடித்துக் கொண்டும் வந்த பிறகு 'சண்டக்கோழி பார்ட் 2' உருவாக இருக்கிறது.

இதில் முதல் பாகத்தில் நடித்த விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின், சந்தர்ப்ப சூழ்நிலையால் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்வது போன்று அவரது கேரக்டர் மாற்றி அமைக்கப்படுகிறது. ராஜ்கிரண் அதே கேரக்டரில் நடிக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயின் தேடி வந்தார்கள். தற்போது மஞ்சிமா மோகன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. விஷாலின் புதிய காதலியாகவும், அத்தை மகளாகவும் மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: