சென்னை:
சந்தோஷம்... மகிழ்ச்சி... என்று முழுமையான குடும்பத்தலைவியாகி விட்டார் நம்ம தாமிரபரணி பானு.


தமிழில் விஷால் நடித்த தாமிரபரணி படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை பானு. இவர் கடந்த 2015ம் ஆண்டு ரிங்கு டோமி என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவிற்கு போட்டார் ஒரு முழுக்கு. இப்போது மனது நிறைந்துள்ளது போல் தனது பேஸ்புக்கில் போட்டுள்ளார் ஒரு புகைப்படத்தை. அதில் முகம் முழுக்க பெருமிதத்துடன் உள்ளார்.



விஷயம் என்னன்னா... இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது. தான் தன் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தைதான் வெளியிட்டுள்ளார். அதிலும் பெண் குழந்தை என்பதால் பானு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளாராம். 


మరింత సమాచారం తెలుసుకోండి: