'மனிதன்' திரைப்படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின், எழில் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இதோடு அவர் கவுரவ் இயக்கும் புது திரைப்படத்திலும் புக்காகி உள்ளார். 


இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சிம்புவுடன் இணைந்து கவுதம் மேனன் இயக்கத்தில், 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அச்சம் என்பது மடமையடா


மேலும் இதன் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. இதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகார பூர்வத்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


மேலும் மஞ்சிமா மோகன், விஷ்ணு உடன் இணைந்து சுசீந்திரன் இயக்கத்தில், பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: