ஜீவா நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள 'திருநாள்' திரைப்படத்தின் இசை இன்று வெளிவரும் நிலையில், தற்போது அவரது அடுத்த திரைப்படம் 'சங்கிலி புங்கிலி கதவை திற' திரைப்படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. 


'தெறி' திரைப்பட இயக்குனர் அட்லீயின் 'ஆப்பிள் புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீ திவ்யா, ராதாரவி, சூரி, ராதிகா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் ஐ.கே.ராதா இந்த படத்தை இயக்கியுள்ளார். 


திகில் கலந்த காமெடி கதையை கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


மேலும் இப்படம் அடுத்த மாதம் வெளிவரும் என தெரிகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: