சென்னை:
நடிப்புடா... நடிக்க வந்து 57 வருடம் ஆகிடுச்சுடா... என்னன்னு யோசிக்கிறீங்களா?
நடிகர் விஜயகுமார் என்றால் நமக்கு சட்டுன்னு நினைவுக்கு வருவது நாட்டாமை படத்தில் அவர் பேசிய "நீதிடா, நேர்மைடா, நியாம்டா" என்ற பஞ்ச் டயலாக்தான். இது பல விதங்களில் கிண்டலாகவும் பயன்படுத்தப்பட்டாலும் நாட்டாமை உட்பட அவர் நடித்த படங்கள் சக்ஸஸ். இவரது நடிப்பும் அருமை என்றுதான் பெயர் வாங்கி உள்ளது.
இப்போ... அது மேட்டர் இல்ல... விஜயகுமார் நடிக்க வந்து 57 வருடங்கள் ஓடிவிட்டதாம். இதையடுத்து ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நாமும் பாராட்டுவோம்...