கர்நாடகா:
மோதலில் இறந்த ரசிகரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் பவன் கல்யாண்.


கர்நாடகாவில் ஜீனியர் என்டிஆர் ரசிகர்களுடன் நடந்த மோதலில் பவன் கல்யாண் ரசிகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தன் ரசிகர்கள் மற்ற நடிகர்களின் ரசிகர்களுடன் மோதுவதை எப்போதுமே விரும்பாதவர் பவன் கல்யாண். 


இந்நிலையில் தன் ரசிகரின் மரண செய்தி அறிந்த அவர் உடனடியாக  புறப்பட்டு அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார். ரசிகரின் மரணம் பவன் கல்யாணை மிகுந்த வேதனைக்குள்ளாக்கி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


మరింత సమాచారం తెలుసుకోండి: