சென்னை:
சிங்கம்... சிங்கம்... கையில பாரு... பச்சை குத்தியிருக்கிறதை பாரு... என்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.


வேறு யாரு நடிகர் சூர்யாதான் தன் கையில் பச்சை குத்தியிருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. சிங்கம் 3 படத்தில் விறுவிறுப்பாக சூர்யா நடித்துக்கொண்டிருக்கிறார்.


 சூர்யாவிற்கு தனது மனைவி ஜோதிகா, மகள் தியா (9), மகன் தேவ் (6) ஆகியோர் மீது அளவு கடந்த பாசம் என்பது கோலிவுட் வட்டாரங்கள் அறிந்த விஷயம். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யாவின் கையில் அவரது மனைவி, குழந்தைகள் பெயர் பச்சை குத்தப்பட்டது போல் இருந்தது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.


இருப்பினும் அந்த பச்சை மெகந்தி போட்டது போல் இருக்கிறது என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: