ஐஸ்வர்யா ராய் திருப்பதி கோவிலில் சென்று மொட்டையடித்தது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் திருப்பதி கோவிலுக்கு சென்று அவர் மொட்டையடித்துள்ளதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் வைரலானது.

உண்மையில் ஐஸ்வர்யா ராய் மொட்டையடிக்கவில்லை. முன்பு ஒரு முறை அவர் கோவிலுக்கு சென்ற இடத்தில் எடுத்த புகைப்படத்தை அப்படி மார்பிங் செய்துள்ளனர். முன்பும் கூட ஐஸ்வர்யா ராய் பற்றி தவறான செய்தி வெளியாகி மிகவும் வைரலானது.

ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடித்ததால் வீட்டில் பெரிய பிரச்சனை ஏற்பட்டு ஐஸ்வர்யா திடிர்ரென்று தற்கொலை செய்து கொண்டார் என்ற வதந்தி பரவியது. இந்த மோசமான வாழ்க்கையை வாழ்வதை விட சாவது மேல் என்று அவர் கடைசியாக அவ்ர் கூறியதாக வதந்தி பரவியது. கடைசியில் பார்த்தால் பாகிஸ்தானில் இருந்து அந்த வதந்தி கிளம்பியுள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel