சென்னை:
சிறுநீரக பிரச்னையால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தற்போது சிறிது சிறிதாக உடல் நலம் தேறி வருகிறாராம்.


தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சராக இருப்பவர் ராஜேந்திர பாலாஜி. இவருக்கு கடந்த சில நாட்களாக சிறுநீரக கோளாறு பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இதனால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 


தற்போது அவர் அபாயகட்டத்தில் இருந்து மீண்டுள்ளார். அவரது உடல் நிலை சிறிதுசிறிதாக முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீக்கிரம் நலம் பெற்று திரும்ப வாழ்த்துவோம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: