அமெரிக்கா:
பறந்த போது தெரியுமா நாம் இப்படி சிக்க போகிறோம் என்று. இறங்கியபோது ஏற்பட்ட விபத்தால் 6 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. என்ன விஷயம் என்றால்...


அமெரிக்காவில் துஸ்கலுசா விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் தரை இறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியான சோக சம்பவம்தான் அது. 


அமெரிக்காவில் அலபாமாவில் உள்ள துஸ்கலுசா விமான நிலையத்தில் ஒரு சிறிய ரக விமானம் தரை இறங்கியது. ஆனால் இறங்கிய வேகத்தில் ஓடுதளத்தில் தாறுமாறாக ஓடிய அந்த விமானம்  சுற்றுச்சுவற்றில் மோதி தீப்பிடித்தது.


இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 6 பேரும் உடல் கருகி பலியாகினர். இவர்கள் புளோரிடாவில் நடந்த பல் டாக்டர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ஆக்ஸ்போர்டு மற்றும் மிஸ்சிசிப்பிக்கு திரும்பி கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தவறான சிக்னல் காரணமாகவே இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: