லாஸ் ஏஞ்சல்ஸ்:
‘பாகுபலி’ பட போஸ்டர் ஞாபகம் இருக்கா... ஒரு கையில் குழந்தையை தூக்கியது போன்ற காட்சி. அதுதான்... அதேதான். அப்படிதான் ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. 


என்னவென்ற பார்ப்போமா! தண்ணீரில் மூழ்கிய மகனை கையில் தூக்கி பிடித்து காப்பாற்றிய அந்த தாய் பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


அமெரிக்காவில் கொலாரடாவில் லேக்வுட் பகுதியை சேர்ந்தவர் செல்சி ரூஸ்செல் (33). இவர் தனது 2 வயது மகன் மற்றும் குடும்பத்தினருடன் போவெல் ஏரிக்கு சுற்றுலா சென்றார். ஒரு படகில் செல்சி ரூஸ்செல் தனது மகனுடன் சவாரி செய்தார்.


அப்போது படகின் மேல் பகுதிக்கு சென்ற அந்த குழந்தை திடீரென எதிர்பாராத விதமாக ஏரி தண்ணீருக்குள் விழுவதை கண்ட செல்சி பதறி துடித்து ஏரி தண்ணீருக்குள் தானும் குதித்து தனது மகனை காப்பாற்றினார்.


ஆனால் அவர் குதித்த இடத்தில் தலைக்கு மேல் மூழ்கும் அளவிற்கு  தண்ணீர் இருந்ததால்... மகனை காப்பாற்ற அவனை தனது கையில் உயரமாக தாங்கி பிடித்தபடியே தண்ணீரில் மூழ்கினார். மற்றொரு படகில் வந்த அவரது குடும்பத்தினர் குழந்தையை காப்பாற்றினர். ஆனால் செல்சி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



మరింత సమాచారం తెలుసుకోండి: