லிமா:
பெரு நாட்டின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து தெருக்களுக்கு ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று பெரு நாட்டு நிர்வாகம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.