பிரேமம் நாயகி சாய் பல்லவி தெலுங்கில் நடித்துள்ள முதல் எண்டிரிப் படம் பிடா. இந்த படமும் அவருக்கு நல்ல வெற்றியாக அமைந்திருக்கிறது. அதனால் தெலுங்கில் பரவலாக பேசப்படும் நடிகையாகி விட்டார். அவரது நடிப்பை பத்திரிகைகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பிடா படத்தை அடுத்து நடிகர் நானியுடன் எம்சிஏ மற்றும் தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் கரு ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் சாய் பல்லவி.

பிடா படத்தில் பானுமதி என்ற கேரக்டராகவே மாரி
தான் வாழ்ந்ததாக
கூறியவர், ரசிகர்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி தெரிவித்துள்ளார். அதோடு, தற்போதைய நடிகைகளில் அனுஷ்கா தான் சிறந்த நடிகை. அவரது படங்களை பார்க்கத் தொடங்கியதில் இருந்தே நான் அவரது தீவிர வெறியான ரசிகையாகி விட்டேன் என்றும் கூறியுள்ளார் சாய் பல்லவி.
click and follow Indiaherald WhatsApp channel