இத்தளம் கும்பகோணத்தில் இருந்து அச்சுதமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இங்கு வாஞ்சிநாத சுவாமி என்ற பெயரில் இறைவன் அருள்பாலித்து வருகிறார். அவரது மனைவி மங்களாம்பிகையும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.


இத்தலத்திற்கு வந்து வழிபட்டு சென்றால், மரண பயம் வராது. மரண பயத்தை அடியோடு போக்கும் சக்தி இக்கடவுளுக்கு உண்டு. இதனால் பக்தர்கள் இத்தலத்திற்கு நம்பிக்கையாக வந்து, வழிபடுகின்றனர். 


மேலும், இக்கோயிலில்  குப்த கங்கை என்று சொல்லபப்டும் ஒரு குளம் உள்ளது. பக்தர்கள் அதில் நீராடிய பின்பே சாமியை தரிசனம் செய்கின்றனர். இத்தலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ராகு-கேதுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: