ஹராரே:
அசந்த நேரத்தில அடிச்ச ஜிம்பாவேவை செமத்தியாக பழித்தீர்த்துக் கொண்டுள்ளனர் இந்திய கிரிக்கெட் புலிகள். அதுவும் எப்படி 10 விக்கெட் வித்தியாசத்தில்...


ஜிம்பாப்வேயில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 3-0 என்று செமத்தியாக கவனித்து தன் வசமாக்கியது. இதனால் "காண்டில்"  இருந்த ஜிம்பாவே முதல் டி20யில் வெற்றிப் பெற நம்ம வீரர்கள் ஜெர்க்காகி விட்டனர். 


விடுவோமா நாங்க என்று அடுத்த போட்டியில் களம் இறங்கிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுதான் முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். இப்போ 2 டீமும் சரிக்கு சரியாக இருக்காங்க...கடைசி போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து விட்டது. இந்த போட்டி நாளைக்கு நடக்குது. அதுக்கு இப்பவே நம்ம கில்லி புலிகள் செமத்தியா டிரெய்னிங்க எடுக்கிறாங்க...


మరింత సమాచారం తెలుసుకోండి: