கொழும்பு:
மேகக்கூட்டத்தில் பிள்ளையார்... பிள்ளையார் என்று இலங்கையின் மட்டக்களப்பில் பரபரப்பு ஏற்பட்டது.


விஷயம் என்னன்னா... நேற்று விநாயகர் சதுர்த்தி... இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் இந்த விழா கொண்டாடப்பட்டது. இலங்கையில் ஏராளமான இந்துக்கள் வசிக்கின்றனர். அவர்களும் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடினர்.


 இந்நிலையில் இலங்கை தமிழர் பகுதியான மட்டக்களப்பில் விநாயகர் வானில் தோன்றியதாக மக்கள் மத்தியில் ஒரு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வானில் மேக கூட்டங்கள் ஒன்று திரண்டு மேல் எழுந்து வந்தன. அதில் ஒரு மேக கூட்டம் விநாயகர் போல் தெரிந்தது.


விநாயகர் சதுர்த்தி நாளில் இப்படியொரு காட்சி வானில் தெரிந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். சாலையில் சென்றவர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு விநாயகர் உருவத்தை நோக்கி வணங்க எங்கும் போக்குவரத்து நெரிசல்தான். சிலர் அதற்கு மேல் போய்விட்டனர். அங்கேயே பூஜைகளும் செய்தனர்.


இந்த மேக விநாயகர் பல நிமிடங்களுக்கு வானில் தெரிந்தார். பின்னர் மேக கூட்டம் கலைந்து சென்றது. இதுதான் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: