சென்னை:
தமிழகம் முழுதும் 32 மாவட்ட தலைநகரங்களில் உள்ள பஸ்ஸ்டாண்ட், பூங்கா போன்ற இடங்களில் இலவச ‘வைபை’ வசதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு வரும் செப்டம்பர் மாதம் முதல் இது நடைமுறைக்கு வரும் என்ற தெரிகிறது.


தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. தற்போது இலவச வைபை வசதியை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்ப்பில் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாம். 


அரசு கேபிள் டி.வி நிறுவனம் முதல் கட்டமாக 32 மாவட்டங்களில் உள்ள தலைநகரங்களில் இந்த இலவச வைபை வசதியை தொடங்கவுள்ளது. பஸ்ஸ்டாண்ட், பூங்கா போன்ற இடங்களில் இந்த வசதி செயல்படுத்தப்பட உள்ளது.


இத்திட்டம் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. செய்யுங்க... செய்யுங்க... இனி பஸ்ஸ்டாண்டில் கும்பலோ கும்பல்தான் என்று சொல்லுங்க...


మరింత సమాచారం తెలుసుకోండి: