சென்னை:
விட்டதை பிடிப்பேன்... கொடுத்த துட்டை எடுப்பேன்னு களத்தில் குதித்துள்ளார் இந்த தயாரிப்பாளர். யார் தெரியுங்களா?


ஒருநேரத்தில் அதிக படங்களுக்கு பைனான்சியர் இவர்தான். அப்புறமா தயாரிப்பாளராக அவதாரமெடுத்தார். யார்ன்னு சொல்லுங்கிறீங்களா. சந்திரபிரகாஷ் ஜெயின்தான். கொஞ்சம் இடைவெளி. பின்னர் விஜய்யின் தலைவா படத்தை தயாரித்தார். இந்த படம் பட்ட பாடு தமிழகமே அறிந்த ஒன்றுதானே. பணம் நஷ்டத்தால் திரைத்துறையை விட்டு ஒதுங்கிய அவர் இப்போ மீண்டும் களத்தில் குதித்துள்ளார்.


இப்போ... விட்ட துட்டை... இந்த படத்துல எடுத்துடுவேன் என்று தில்லாக களம் இறங்கி தேனாண்டாள் நிறுவனத்துக்காக சந்தானம் தயாரித்து நடித்திருக்கும் "தில்லுக்கு துட்டு" படத்தோட தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை வாங்கிட்டாராம்... வாங்கிட்டாராம். இந்த படம் செம ஹிட் அடிக்கும்னு பட்சி சொல்லியிருக்கும் போல... நம்பிக்கையை விட பெரிசு வாழ்க்கையில் வேறு என்ன இருக்கு?


మరింత సమాచారం తెలుసుకోండి: